×

தமிழகத்திற்கு துரோகம் செய்த மோடி அரசு தூக்கி எறியப்பட வேண்டும்


சென்னிமலை, ஏப். 9: ‘‘தமிழகத்திற்கு கடந்த 5 ஆண்டாக பெரும் துரோகத்தினை செய்த பாசிச மோடி அரசு தூக்கி எறியப்பட வேண்டும்,’’ என சென்னிமலையில் வைகோ பேசினார்.   ஈரோடு மக்களவை தொகுதியில் போட்டியிடும் கணேசமூர்த்தியை ஆதரித்து சென்னிமலை யூனியன், வெள்ளோடு, சென்னிமலை டவுன் பகுதியில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து ம.தி.மு.க., பொது செயலாளர் வைகோ பேசியதாவது: மத்தியில் ஆட்சி அமைத்த மோடி கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழகத்திற்கு பெரும் துரோகத்தினை செய்துள்ளார். தமிழ் மொழி, கலாசாரத்தை அழிக்கும் பணியில் தொடங்கி, கொங்கு மண்டலத்தில் சிறு, குறு, விவசாயிகளை பாதிக்கும் உயர் மின் அழுத்த கோபுரம் அமைத்தல், கெயில் எரிவாயு குழாய் அமைத்தல், பெட்ரோல் கொண்டு செல்ல குழாய் அமைத்தல் என விவசாயிகளின் வாழ்வாதரத்தை அழிக்கும் செயலை செய்துள்ளார்.

 தமிழகத்தில் மட்டும் வேலை இல்லா பட்டதாரிகள் எண்ணிக்கை 80 லட்சத்தை தாண்டி உள்ளது. காஸ் சிலிண்டர் விலை ரூ.450ல் இருந்து, ரூ.900 ஆக உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். நீட் தேர்வை கொண்டு வந்து நமது குழந்தைகளின் படிப்பு பாழ்பட்டு விட்டது. நமது கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் காங்கிரஸ் கூட்டாட்சி அமைந்தால், நீட் தேர்வு ரத்து செய்வது மட்டும் அல்ல, மீண்டும் கல்வி துறை மாநில அரசுகளிடம் ஒப்படைக்கப்படும்.   மேலும் இந்த அரசின் சரியான அணுகு முறை இன்மையால் இங்கு வரவேண்டிய பல தொழிற்சாலைகள் வரவில்லை. இந்த மாநில, மத்திய அரசுகளை தூக்கி எறிய உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து கணேசமூர்த்தியை வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு வைகோ பேசினார்.

Tags : Modi ,government ,Tamils ,
× RELATED ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம்;...