×

நாமக்கல் மாவட்டத்தில் தேர்தலையொட்டி 3 நாட்கள் மதுக்கடைகளை மூட உத்தரவு

நாமக்கல், ஏப்.9: நாமக்கல் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி 3 நாட்களுக்கு மதுக்கடைகளை மூடப்படுகிறது.நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியாமரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் வரும் 18ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. இதையொட்டி, வரும் 16ம் தேதி காலை 10 மணி முதல் 18ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை அனைத்து மதுக்கடைகளும் மூடப்படும்.மேலும், எப்எல்3 அனுமதி பெற்ற தனியார் மதுபான பார்களும் மூடப்பட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, இந்த நாட்களில் மதுக்கடைகளை திறந்து வைத்து வியாபாரம் செய்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு மாவட்ட கலெக்டர் ஆசியாமரியம் தெரிவித்துள்ளார்.


Tags : Namakkal district ,bungalows ,
× RELATED நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் சுற்றுவட்டாரப் பகுதியில் கனமழை!