×

தேர்தல் பிரிவு துணை கலெக்டர் பணியிடம் காலி சிவகிரியில் வருவாய்த்துறையினர் ஆர்ப்பாட்டம்

சிவகிரி, ஏப்ரல்.9:  ேதர்தல் பிரிவு துணை கலெக்டர் பணியிடம் நிரப்பப்படாததை கண்டித்து சிவகிரி தாலுகா அலுவலகம் முன்பு வருவாய்த்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழகத்தில் 23 மாவட்டங்களில் தேர்தல் பிரிவு துணை கலெக்டர் பணியிடம் காலியாக உள்ளது. வரும் 18ம் தேதி மக்களவை ேதர்தல் நடைபெற உள்ள நிலையில் காலிபணியிடங்களை நிரப்பக்கோரி நேற்று  தமிழ்நாடு வருவாய்துறை ஊழியர் சங்கத்தினர் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிவகிரி தாலுகா அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் மைதீன் பட்டாணி தலைமை வகித்தார். சிவகிரி மண்டல துணை வட்டாட்சியர் ஆனந்த், துணை வட்டாட்சியர் ராணி, சங்கத்தின் வட்டார தலைவர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசின்  மெத்தனப்போக்கை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.  தலைமையிடத்து துணை வட்டாட்சியர் ராமலிங்கம் கோரிக்கையை விளக்கிப் பேசினார். சிவகிரி வருவாய்த்துறை ஊழியர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். வருவாய் ஆய்வாளர் சிவனு பாண்டி நன்றி கூறினார்.

Tags : Vasudevan ,demonstration ,Galle Sivagiri ,Deputy Collector ,
× RELATED கோயில் வரவு, செலவு கணக்கு கேட்டதால்...