×

அய்யனார் கோயில் தெருவில் பொதுக்கழிப்பிடம் சீரமைக்கப்படும்

புதுச்சேரி, ஏப். 9:  புதுவை, தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் என்ஆர் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் நெடுஞ்செழியன் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். நேற்று தட்டாஞ்சாவடி கங்கையம்மன் கோயில் வீதி, அய்யனார் கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அங்கு பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் இளைஞர்கள் பட்டாசு வெடித்தும் ஆரவாரம் செய்தனர். அதன்பிறகு முன்னாள் எம்எல்ஏ அசோக் ஆனந்துடன் அவர் வீடுவீடாக சென்று ஜக்கு சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.

அவர்களுடன் என்ஆர் காங்கிரஸ், அதிமுக, பாமக மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்களும் திரளாக கலந்து கொண்டு நெடுஞ்
செழியனுக்கு ஆதரவு திரட்டினர். வாக்கு சேகரிப்பின்போது அய்யனார் கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வாய்க்கால் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது குறித்தும், அப்பகுதியில் உள்ள பொதுகழிப்பிடம் சுகாதாரமற்ற நிலையில் இருப்பது பற்றியும் பெண்கள் வேட்பாளரிடம் முறையிட்டனர். தேர்தல் முடிந்ததும் இந்த குறைகள் அனைத்தும் நிவர்த்தி செய்யப்படும் என உறுதியளிக்கப்பட்டது.

Tags : Ayyanar ,
× RELATED ஆயக்காரன்புலம் கலீதீர்த்த ஐயனார் ஆலய தங்க குதிரை திருவிழா