×

மேயராக இருந்தபோது செய்த சாதனைகளை கூறி அமமுக வேட்பாளர் சாருபாலா பரிசுபெட்டகத்திற்கு வாக்குசேகரிப்பு

திருச்சி, ஏப்.9: மேயராக இருந்தபொழுது செய்த சாதனைகளை சொல்லி அமமுக வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் நேற்று திருச்சி மாநகரில் நேற்று பரிசுபெட்டகம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். திருச்சி பாராளுமன்ற அமமுக வேட்பாளர்  சாருபாலா தொண்டைமான் நேற்று காலை திருச்சி மேற்கு தொகுதி, ஜங்ஷன் பகுதிக்குட்பட்ட கருமண்டபம் , ராம்ஜிநகர்,பிராட்டியூர் ,கொத்தமங்கலம்  பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். நேற்று மாலை திருச்சி மேற்கு தொகுதிக்கு உட்பட்ட தில்லைநகர், பீமநகர், கூனிபஜார், உக்கிரகாளியம்மன் கோவில், தென்னூர், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதுக்களிடம் பரிசு பெட்டகம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். திருச்சி மாநகர் மாவட்ட அவைத்தலைவர் ராமலிங்கம், ஜங்ஷன் பகுதி கழக செயலாளர் தன்சிங் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர். பொதுமக்களிடையே வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் பேசியதாவது:

கடந்த இரண்டு முறை மாநகர மேயராக திருச்சி மாநகராட்சியில் மக்கள் பணியாற்றியுள்ளேன் அப்போது பொதுமக்களின் பிரச்னைகளான குடிநீர் பிரச்சனை, சாலை வசதி, அடிப்படை வசதிகள் உள்ளிட்டவைகளை உடனுக்குடன் தீர்க்கப்பட்டு சிறந்த முறையில் மேயராக பணிபுரிந்தேன். தற்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் ஆதரவோடு திருச்சி பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக நிறுத்தப்பட்டு உங்கள் முன் வந்து நிற்கிறேன். என்னை பரிசு பெட்டகம் சின்னத்தில் வெற்றி பெறச் செய்தால் திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, திருவெறும்பூர், ரங்கம், கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை ஆகிய பகுதியில் உள்ள அடிப்படை பிரச்சனைகள் உடனுக்குடன் தீர்க்கப்படும். என்னை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்யுங்கள் என கேட்டுக்கொண்டார்.

Tags : election campaign ,mayor ,
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...