×

கரூர் தொகுதியில் எனது வெற்றி உறுதியாகி விட்டது கிருஷ்ணராயபுரம் பகுதியில் காங். வேட்பாளர் ஜோதிமணி பிரசாரம்

கரூர், ஏப். 9: கரூர் மக்களவை தொகுதியில் எனது வெற்றி உறுதியாகி விட்டது என்று கிருஷ்ணராயபுரம் பகுதியில் பிரசாரம் செய்த காங். வேட்பாளர் ஜோதிமணி கூறினார். கரூர் மக்களவை தொகுதி திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி நேற்று கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றியம், பேரூராட்சியில் கிராமம் கிராமமாக சென்று வாக்கு சேகரித்தார். ஆரத்தி எடுத்த பெண்களின் காலில் விழுந்து ஆசிபெற்றார். அவர் பேசுகையில், கடந்த 10 ஆண்டுகளாக எம்பியாக இருப்பவர் மக்களையும் சந்திக்கவில்லை. எததையும் செய்யவில்லை. எங்கு சென்றாலும் தண்ணீர் பிரச்சனை என்கின்றனர். இரு தொகுதிகளை தவிர எங்கும் அரசு கல்லூரிகள் இல்லை. ஆனால் அவர் 45 கல்லூரிகளை நடத்துகிறார். தொகுதியில் உள்ள ஏழை மாணவர் ஒருவருக்கு கூட சீட் கொடுக்கவில்லை. எனது வெற்றி உறுதியாகி விட்டது.

சுற்றுப்பயணத்தில் மக்கள் திரளுவதால் குறிப்பிட்ட நேரத்திற்கு போக முடியவில்லை. வெற்றிபெற்றதும் நிறைவேற்ற வேண்டிய கோரிக்கைகளை பற்றித்தான் மக்கள் என்னிடம் கூறி வருகின்றனர். 100 நாள் வேலையில்லை. வேலை செய்தாலும் கூலி தாமதம் ஆகிறது என பல பிரச்னைகளை கூறினர், அவற்றை நிறைவேற்ற பாடுபடுவேன் என்றார். நிர்வாகிகள் நன்னியூர் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் ரவிராஜா, முன்னாள் எம்எல்ஏ காமராஜ், மகாலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : victory ,constituency ,Karur ,Jyothimani ,area ,Krishnarayapuram ,
× RELATED வங்கியாளர்கள் கண்காணிக்க வேண்டும்...