×

கறம்பக்குடியில் வி.சி பிரமுகரை தாக்கியவர்களை கைது செய்யகோரி ஆர்ப்பாட்டம்

கறம்பக்குடி, ஏப்.9:  கறம்பக்குடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரை தாக்கிய மர்ம நபர்களை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே ஆத்தியடிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரபாண்டியன் (38). விடுதலை சிறுத்தைகள் கட்சி புதுக்கோட்டை வடக்கு மாவட்ட துணை செயலாளர். இவர் கடந்த வாரம் கறம்பக்குடிக்கு வந்து விட்டு தனது டூவீலரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது கறம்பக்குடி அருகே வடக்கு புதுப்பட்டி கிராமம் அருகே செல்லும் போது அவரை மர்ம நபர்கள் தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த சந்திரபாண்டியன் தஞ்சை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கறம்பக்குடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் சந்திர பாண்டியனை தாக்கிய மர்ம நபர்களை கைது செய்ய கோரி கறம்பக்குடி ஒன்றிய நகர விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சீனிக்கடை முக்கத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உடனே சம்பவ இடத்திற்கு வந்த கறம்பக்குடி இன்ஸ்பெக்டர் கலனியப்பன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது சந்திரபாண்டியனை தாக்கியவர்களை விரைவில் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை அடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கலைந்து சென்றனர்.

Tags : Demonstration ,
× RELATED விவசாயிகளுக்கு உரக்கட்டு செயல்விளக்க பயிற்சி