அதிராம்பட்டினம், ஏப். 9: அதிராம்பட்டினத்தில் காங்கிரஸ் சார்பில் தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தஞ்சை மக்களவை தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிடும் பழனிமாணிக்கத்தை ஆதரித்து அதிராம்பட்டினம் பேருந்து நிலைய வளாகத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் தெருமுணை பிரசார கூட்டம் நடந்தது. பட்டுக்கோட்டை காங்கிரஸ் தலைவர் ராஜாதம்பி தலைமை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர் யோகானந்தம், அதிரை நகர தலைவர் கார்த்தி, அதிரை நகர பொறுப்பாளர் மொய்தீன் முன்னிலை வகித்தனர். வயலூர் ரவி சிறப்புரையாற்றினார். திமுக முன்னாள் எம்எல்ஏ ஏனாதிபாலு, திமுக நகர செயலாளர் ராமகுணசேகரன் மற்றும் பலர் பங்கேற்றனர்.