×

மணல் கடத்திய 8 பேர் கைது 11 வாகனங்கள் பறிமுதல்

நாகை, ஏப்.9:நாகையில் மணல் கடத்தில் ஈடுபட்ட 8 பேர் 11 வாகனங்களுடன் கைது செய்யப்பட்டனர். நாகை எஸ்.பி. விஜயகுமார் உத்தரவின் பேரில் கீழ்வேளூர் போலீஸ்சார்  கோகூர் தீத்தாம்பேட்டை பகுதியில் மணல் கடத்தப்படுகிறதா என்று திடீர் சேதனையில் ஈடுப்பட்டனர். அப்போது வெட்டாற்றில் இருந்து மணல் திருட்டுத்தனமாக மணல் எடுத்து வந்த 11 மாட்டுவண்டி ஒரு டிராக்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.   மாட்டு வண்டி ஓட்டி வந்த 7 பேர் மற்றும் டிராக்டர் டிரைவர் முகமதுஜமால் ஆகியோரை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய இரண்டு பேரை தேடி வருகின்றனர். இது குறித்து கீழ்வேளூர் போலீஸ்சார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Sandy ,
× RELATED உம்மன் சாண்டிக்கு எதிரான சரிதா...