×

சீர்காழி சட்டைநாதர் காலனியில் சாலையின் நடுவில் மெகா பள்ளம் மாணவிகள் அச்சம்

சீர்காழி, ஏப்.9: சீர்காழி சட்டைநாதர் காலனியில் சாலையின் நடுவே ஏற்பட்டுள்ள மெகா பள்ளத்தால் மாணவிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். சீர்காழி சட்டைநாதர் காலனி வழியாக புதிய பேருந்து நிலையத்திற்கு இணைப்பு சாலை அமைந்துள்ளது. இந்த சாலையால் பேருந்து நிலையத்திற்கு விரைவில் சென்றுவிடலாம். இதேபோல் பேருந்து நிலையத்திலிருந்து கடைவீதி பழைய பேருந்து நிலையம், பெண்கள், ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகளுக்கு விரைவாக சென்று விடலாம். இதனால் வியாபாரிகள், பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் இந்த சாலையை அதிகம்
பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சாலையின் நடுவே கழிவுநீர் செல்வதற்காக அமைக்கப்பட்டிருந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையின் நடுவே மெகா பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த சாலை வழியாக செல்பவர்கள் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் சாலை நடுவே பள்ளம் இருப்பது தெரியாமல் அந்த வழியாக செல்பவர்கள் பள்ளத்தில் விழுந்து காயமடைந்து வருகின்றனர். சாலை நடுவே பள்ளம் இருப்பது குறித்து நகராட்சி நிர்வாகத்திற்கு புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பொதுமக்களின் நலன் கருதி சாலையில் நடுவே ஏற்பட்டுள்ள பள்ளத்தை சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : road ,Sirkazhi Sadhinanathar ,girls ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி