×

கர்ப்பிணி, கை குழந்தையுடன் வரும் தாய்மார்களுக்கு வாக்களிக்க முன்னுரிமை: கலெக்டர் அறிவுரை

திருவள்ளூர், ஏப். 9: ‘‘வாக்களிக்க வரும் முதியோர், நிறைமாத கர்ப்பிணிகள், கை குழந்தையுடன் வரும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு, வாக்குச் சாவடிகளில் முன்னுரிமை அளிக்க வேண்டும்’’ என திருவள்ளூர் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் அறிவுறுத்தி உள்ளார்.திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள, 10 சட்டமன்ற தொகுதிகளிலும், வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குச்சாவடி அலுவலருக்கு, இரண்டாம் கட்ட பயிற்சி முகாம் நேற்றுமுன்தினம் நடந்தது.திருவள்ளூர் தொகுதிக்கான பயிற்சி கூட்டத்தில், கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் பேசுகையில், ‘’பல தேர்தல்களில் பணியாற்றி உள்ளோம் என யாரும் சாதாரணமாக இருந்து விடக்கூடாது. இத்தேர்தலில் அறிவித்துள்ள புதிய விதிமுறைகள் குறித்து நன்கு பயிற்சி பெற வேண்டும்.வாக்குச்சாவடிகளுக்கு, தலைமை அலுவலர்களே பொறுப்பு. ஏதேனும் குளறுபடி ஏற்பட்டால், உடனடியாக நிவர்த்தி செய்யும் வகையில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். வாக்குச்சாவடி விதிமுறையை செயல்படுத்துவதில் பாரபட்சம் கூடாது. நடுநிலையோடு செயல்பட வேண்டும். வாக்குப்பதிவு நாளில், கட்சி ஏஜெண்டுகள் தொப்பி அணிவது, தலைவர் போட்டோ, சின்னம் போன்றவற்றை வைத்திருக்க அனுமதிக்கக்கூடாது.

மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க சக்கர நாற்காலி வசதி செய்யப்பட்டுள்ளது. முதியோர், மாற்றுத்திறனாளிகள், கை குழந்தையுடன் வரும் பெண்கள், நிறைமாத கர்ப்பிணிகளுக்கு, வாக்குப்பதிவு செய்ய, முன்னுரிமை வழங்க வேண்டும்.ஏப்ரல் 17 அன்று அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு செல்ல வேண்டும். மண்டல அலுவலர் ஒப்படைக்கும் தேர்தல் பொருட்களை சரிபார்த்து பெற வேண்டும். வாக்குச்சாவடியை சுற்றி, 100 மீட்டர் சுற்றளவுக்கு, கட்சி சேர்ந்த சின்னம், கொடி இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். வேட்பாளர்கள், 200 மீட்டர் தூரத்துக்கு அப்பால், ‘’பூத்’’ அமைத்திருக்க வேண்டும்.வாக்குச்சாவடியாக செயல்படும் பள்ளி வளாகத்தில், பிரதமர், முதல்வர் உட்பட முக்கிய தலைவர்களின் படங்கள் இருக்கக்கூடாது. வாக்குப்பதிவு, காலை, 7 மணிக்கு துவங்கி, மாலை, 6 மணி வரை நடக்கும். மாலை, 6 மணிக்கு, வரிசையில் காத்திருப்பவருக்கு ‘’டோக்கன்’’ வழங்கப்பட்டு வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும். இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை, ஆண், பெண் வாக்குப்பதிவு விவரங்களை தெரிவிக்க வேண்டும்.  இவ்வாறு, கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் கூறினார்.

Tags : mothers ,Collector ,babies ,
× RELATED குடிநீர் பிரச்னைகளுக்கு...