×

செங்கல்பட்டில் கத்தியை காட்டி பணம் பறித்த வாலிபருக்கு குண்டாஸ்

செங்கல்பட்டு, ஏப்.9: செங்கல்பட்டு சுண்ணாம்பு கார தெருவை சேர்ந்தவர் அன்வர் (எ) அன்வர் உசேன்(26). இவரை கடந்த 15 நாட்களுக்கு முன்பு செங்கல்பட்டு பஜார் பகுதியில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்ததாக செங்கல்பட்டு போலீசார் கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே கொைல, கொள்ளை உள்ளிட்ட 10 வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும் இவரை ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க காஞ்சிபுரம் எஸ்பி சந்தோஷ் ஹதிமானி, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையாவுக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் அன்வர் உசேனை ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டார். இதனையடுத்து அன்வர் உசேன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags : men ,
× RELATED இன்ஸ்டாகிராமில் பல ஆண்களுடன் தொடர்பு;...