×

படப்பிடிப்பில் சிலிண்டர் வெடித்து தாய்-மகள் பலி தலைமறைவாக இருந்த தயாரிப்பாளர் கைது

சென்னை: பெங்களூரு பாகலூருவில் நடிகர் அர்ஜூனின் அக்கா மகன் சிரஞ்சீவி சர்ஜா, சரத்குமார் மகள் வரலட்சுமி நடித்த ரனம்  திரைப்பட படப்பிடிப்பின் போது, எதிர்பாராதவிதாக சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில்  படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க வந்த தாய், மகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து பாகலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அப்போது சினிமா, தயாரிப்பாளர், இயக்குனர் உள்பட பலருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர்களை கைது செய்ய போலீசார் தேடி வந்தனர். ஆனால் அனைவரும் வெவ்வேறு மாநிலத்திற்கு தப்பி ஓடிவிட்டனர்.  இதையடுத்து அவர்களை பிடிப்பதற்கு பாகலூர் போலீசார் தரப்பில் தனிப்படை அமைக்கப்பட்டது.

போலீசார் சினிமா சண்டை பயிற்சியாளரான சந்தோஷ் என்பவரை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் தயாரிப்பாளர் சீனிவாசனை போலீசார் தேடி வந்தனர். சீனிவாசனின் செல்போன் சிக்னல் சோதனை செய்தனர்.  அவர் சென்னையில் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து சென்னைக்கு விரைந்த தனிப்படை போலீசார் சீனிவாசன் தலைமறைவாக இருந்த இடத்தை சுற்றி வளைத்து கைது செய்தனர்.விசாரணையில், சீனிவாசன் பெங்களூரு சாம்ராஜ்பேட்டையை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. சினிமா தயாரிப்பாளர் மட்டுமின்றி, பகுதிநேர பட்டு பூச்சிகள் வளர்ப்பு பணிகளிலும் ஈடுபட்டு வந்துள்ளார். போலீசார் கைது செய்த  போது, தலைமறைகாக இருப்பதற்கு வரவில்லை. பட்டுபூச்சி விற்பனை குறித்து தொழிலதிபர் ஒருவரை சந்தித்து பேச வந்ததாக தெரிவித்துள்ளார். ஆனால் அவரது பேச்சை போலீசார் நம்பவில்லை. அவரை பெங்களூரு அழைத்து  வந்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Producer ,filming cylinder ,mother-daughter ,
× RELATED விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஈஷா...