×

பரிதவிக்கும் விவசாயிகள் தேர்தலில் வாக்களிக்க உறுதிமொழி

கமுதி, ஏப். 8: கடலாடி வட்டம் ஏர்வாடி ஊராட்சியில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் கலெக்டர் வீரராகவ ராவ் தலைமையில் புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது. தேர்தலில் அனைவரும் கட்டாயமாக 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உறுதி மொழி எடுக்கப்பட்டது. மாதிரி வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கெட்ஸி லீமா அமலினி, கடலாடி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சித்ரா, வட்டார வளர்ச்சி அலுவலர் மேகலா, கீழக்கரை வட்டாட்சியர் சிக்கந்தர் பபிதா, தேர்தல் துணை வட்டாட்சியர் ஜமால் முகம்மது, ஏர்வாடி ஊராட்சி செயலர் அஜ்மல்கான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Peasant Farmers ,election ,
× RELATED ஜார்க்கண்ட் தேர்தல்: தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை