×

மரத்தில் பைக் மோதி வாலிபர் பலி

வாடிப்பட்டி, ஏப். 8: மதுரை திடீர்நகர் மேலகடை சிஹேரா நகரை சேர்ந்தவர் ஜெயமூர்த்தி. இவரது மகன் அஜித்குமார் (20). தனியார் தொழிற்சாலையில் பணி செய்து வந்தார். இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தனது நண்பர்களுடன் கிணற்றில் குளிப்பதற்காக மதுரையிலிருந்து குமாரத்திற்கு நகரி சாலையில் தனது மோட்டார் பைக்கில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக பிள்ளையார்நத்தம் அருகே வலைவில் திரும்பியபோது சாலையோரம் இருந்த பனை மரத்தில் மோட்டார் பைக் மோதியது. இதில் அஜித்குமார் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக சமயநல்லூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : young lady kills ,
× RELATED பைக்குகள் மோதி வாலிபர் பலி