×

ஓட்டுக்கு வாங்க மாட்டோம் நோட்டு 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மாரத்தான்

திருவில்லிபுத்தூர், ஏப். 8: நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, திருவில்லிபுத்தூர் அருகே விழிப்புணர்வு மராத்தான் ஓட்டம் நடைபெற்றது.தமிழகத்தில் 39 மக்களவை தொகுதிகளுக்கும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் வருகிற ஏப்.18ல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையமும், தனியார் அமைப்புகளும் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.இந்நிலையில், திருவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரத்தில், 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, நேற்று விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது. இதில், ‘வாக்கு அளிப்பதன் அவசியம்; போடுவோம் ஓட்டு; வாங்க மாட்டோம் நோட்டு என்ற வாசகம் எழுதிய அட்டைகளை கையில் பிடித்தபடி 10 கி.மீ தூரம் வரை ஓடினர். இதில், 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற முதல் 3 நபர்களுக்கு 2 கிராம் தங்க நாணயம், போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பதக்கம் வழங்கப்பட்டது.

Tags : Marathon ,
× RELATED திருத்தணியில் கல்லூரி மாணவர்களின் 100...