×

ஓபிஎஸ் மகனுக்கு சின்னமனூரில் ஓட்டு கிடைக்குமா? காட்டுத்தீ... மகனுக்காக துணைமுதல்வர் மனைவி பெரியகுளத்தில் பிரசாரம்


பெரியகுளம்,ஏப்.8: தேனி மக்களவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ரவீந்திரகுமாருக்கு ஆதரவாக அவரது தாய் மற்றும் உறவினர்கள் பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டியில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர்.தேனி மக்களவை தொகுதியில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தில் மகன் ரவீந்திரநாத்குமார் அதிமுக சார்பில் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து நேற்று முன்தினம் பெரியகுளத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், சில துரோகிகளால் ஏற்படுத்தப்பட்ட இடைத்தேர்தலில் பெரியகுளம் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேனி மக்களவை தேர்தலில் அதிமுக சார்பில் ரவீந்திரநாத்குமாரும், பெரியகுளம் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் மயில்வேலும் பேட்டியிடுகின்றனர். அவர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கூறினார்.

இந்நிலையில், பெரியகுளம் ஒன்றிய பகுதியான வடுகபட்டியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி, மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத்குமார் மனைவி ஆனந்தி, டாக்டர்.முத்துகுகனின் மனைவி ஐஸ்வர்யா ஆகியோர் வாக்கு சேகரித்தனர். பங்களாப்பட்டி கிராமத்தில் துணை முதல்வரின் சகோதரிகள் எஸ்.சித்ரா, அமுதா, சாமுண்டீஸ்வரி, அதிமுக சட்டமன்ற வேட்பாளர் மயில்வேலின் மனைவி காமாட்சியம்மாள் மற்றும் கட்சி நிர்வாகிகள் வீதிவீதியாக சென்று வாக்குகள் சேகரித்தனர்.

Tags : OBS ,Chinnamanur ,spouse ,companion wife ,Periyakulam ,
× RELATED தேவாரம் பகுதியில் குறைந்து வரும் நாட்டு கோழி வளர்ப்பு