×

கொங்கணாபுரம் ஒன்றிய பகுதிகளில் அதிமுக வேட்பாளருக்கு பொன்னையன் பிரசாரம்

இடைப்பாடி, ஏப்.8: இடைப்பாடி தொகுதியை சென்னை மாநகரைப் போல மாற்றியவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி என, அதிமுக வேட்பாளர் கே.ஆர்.எஸ் சரவணன் பிரசாரத்தில் முன்னாள் அமைச்சர் பொன்னையன் தெரிவித்தார். சேலம் நாடாளுமன்ற தொகுதியில், அதிமுக சார்பில் போட்டியிடும் கே.ஆர்.எஸ்.சரவணன், இடைப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொங்கணாபுரம் ஒன்றிய பகுதிகளில் நேற்று தனது ஆதரவாளர்கள் மற்றும் கூட்டணி கட்சியினருடன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். எட்டிக்குட்டை மேடு, சின்னப்பம்பட்டி பகுதியில், திறந்த வேனில் வீதி, வீதியாக சென்று இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க கோரினார். அப்போது, முன்னாள் அமைச்சர் பொன்னையன் பேசுகையில், ‘ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். மக்கள் மத்தியில் அவரது செல்வாக்கு பெருகி வருகிறது.

இப்பகுதியில் சிறு,சிறு கிராமங்களுக்கும் தரமான சாலை வசதி, மேம்பாலங்கள், அங்கன்வாடி மையம் என பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி, இடைப்பாடி தொகுதியை சென்னை மாநகருக்கு இணையாக மாற்றியுள்ளார். ஏழை மக்கள், விவசாய தொழிலாளர்களுக்கு ₹2 ஆயிரம் வழங்கும் திட்டம், தேர்தலுக்கு பிறகு மீண்டும் தொடரும். எனவே அதிமுக வேட்பாளர் கே.ஆர்.எஸ்.சரவணனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற ெசய்ய வேண்டும்,’ என்றார். தொடர்ந்து, கொங்கணாபுரம் ஒன்றியத்தில் உள்ள புதுப்பாளையம், சமுத்திரம், கோரணம்பட்டி, மூலப்பாதை, கச்சுப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர். அப்ேபாது, சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் எம்எல்ஏ, எம்பி பன்னீர்செல்வம், பாமக அண்ணாதுரை, வேலன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் கரட்டூர் மணி, ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், முன்னாள் ஒன்றியக்குழு துணை செயலாளர் சாந்தி செந்தில்குமார், நிர்வாகிகள் பாலாஜி, ராமமூர்த்தி, பரமசிவம், தங்கராஜ், மாணிக்கம், தங்கவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Ponniyan ,candidate ,AIADMK ,Union Territories ,Kanakapuram ,
× RELATED கியூட், நெட் தேர்வுகளுக்கான மதிப்பெண்களை சமப்படுத்தும் முறை நீக்கம்