×

அஞ்செட்டி அருகே சோதனைச்சாவடி அருகே ஓடையில் வீசப்பட்ட நாட்டு துப்பாக்கி பறிமுதல்

தேன்கனிக்கோட்டை, ஏப்.8:  கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே தக்கட்டி கிராமத்தில் வனசோதனைச்சாவடி உள்ளது. இந்த சோதனைச்சாவடியை ஒட்டி ஓடை செல்கிறது. நேற்று முன்தினம் அப்பகுதியில் அஞ்செட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஓடை அருகே நாட்டு துப்பாக்கி ஒன்று கேட்பாரின்றி கிடப்பதை கண்டு திடுக்கிட்டனர். உடனே, அதனை கைப்பற்றினர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் சட்டம்-ஒழுங்கு நடவடிக்கைக்காக துப்பாக்கி உரிமம் வைத்திருப்போர், தங்களது துப்பாக்கிகளை அருகாமையில் உள்ள காவல்நிலையங்களில் ஒப்படைக்குமாறு அறுவுறுத்தப்பட்டது.

இதன்படி, அனைத்து மாவட்டங்களிலும் முறையாக துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்ட நிலையில், மலை குன்றுகள் நிறைந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வன விலங்குகளிடமிருந்து பாதுகாத்துக்கொள்ள உரிமம் இன்றி துப்பாக்கி பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் போலீசார் கண்காணிப்பு பணியை முடுக்கி விட்டுள்ளனர். மேலும், ரோந்து பணியையும் தீவிரப்படுத்தியுள்ளனர். இதனால், போலீசிடமிருந்து தப்பிப்பதற்காக சோதனைச்சாவடி அருகே துப்பாக்கியை வீசி சென்றிருக்கலாம் என தெரிகிறது. மேலும் மான், முயல் வேட்டைக்கு வந்தவர்கள் அப்பகுதியில் துப்பாக்கியை வீசி சென்றனரா? என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : gunman ,checkpoint ,Anjeti ,
× RELATED தருமபுரி அருகே தொப்பூர் சோதனை சாவடியில் 16 கிலோ தங்கம் பறிமுதல்..!!