×

சுடுகாடு பிரச்னை குளத்தூர் அருகே கருப்பு கொடி காட்டி போராட்டம்

குளத்தூர், ஏப்.8:  குளத்தூர் அருகே சுடுகாடு பிரச்னை கருப்பு கொடிகாட்டி தேர்தலை புறக்கணிக்க போவதாக கூறி போராட்டம் நடத்தினர். குளத்தூரையடுத்த முத்துக்குமாரபுரம் கிராமத்தில் சுடுகாட்டு உரிமை மறுக்கப்படுவதாக கூறி ஒரு தரப்பினர் வீடுகளுக்கு முன்பு கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த குளத்தூர் போலீசார் அங்கு சென்று போராட்டம் நடத்தியவர்களிடம் குளத்தூர் காவல்நிலையத்தில் பேச்சுவார்த்தை நடத்தி கொள்ளலாம். தற்போது போராட்டத்தை கைவிடும்படி கூறியதையடுத்து அவர்கள் உடன்பட்டு போராட்டத்தை கைவிட்டனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட தரப்பினர் கூறியதாவது, ஊர் கிழக்கு பகுதியில் உள்ள சுடுகாட்டு கொட்டகையில் தற்போது எங்களுக்கு உரிமை மறுக்கப்பட்டு வருகிறது. அதனால் நடைபெறுகின்ற மக்களவை மற்றும் சட்டசபை இடைத்தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்து போராட்டம் நடத்தினோம். போலீசாரின் உத்தரவையடுத்து போராட்டத்தை கைவிட்டுள்ளோம். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி இப்பிரச்னையை சுமூகமான முறையில் தீர்க்கவேண்டுமென என்றனர்.

Tags : area ,Kuttur ,
× RELATED ராட்சத அலையில் சிக்கியவர் பலி