×

முள்ளக்காடு அருகே வாலிபர் வெட்டிக்கொலை

ஸ்பிக்நகர், ஏப்.8:  தூத்துக்குடி அருகேயுள்ள முள்ளக்காடு அடுத்துள்ள ராஜீவ் நகர் பகுதியில் நேற்று இரவு 9.15 மணி அளவில் நடந்து சென்ற வாலிபரை பைக்கில் வந்த மர்ம கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பி சென்றது. அவருக்கு சுமார் 42 வயதிருக்கும். அவர் யார், எதற்காக அங்கு என்ற விபரம் தெரியவில்லை. தகவறிந்த முத்தையாபுரம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜபிரபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ரத்தவெள்ளத்தில் கிடந்தவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர் யார், எதற்காக கொலை செய்யப்பட்டாார். பெண் தொடர்பு காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Mullakkad ,
× RELATED தூத்துக்குடியில் வீட்டில் பதுக்கி...