×

தனியார் கூரியர் சர்வீஸில் வாடிக்கையாளர்கள் அனுப்பிய பொருள்களை திருடிய 3 பேர் கைது

காஞ்சிபுரம், ஏப்.8: காஞ்சிபுரம் காமராஜர் சாலையில் பிரபல தனியார் கூரியர் சர்வீஸ் நிறுவனம் உள்ளது. இந்த கூரியர் சர்வீசில் கடந்த சில மாதங்களாக வாடிக்கையாளர்களுக்குள் வந்த மின்சாதன பொருட்கள், டிவி, செல்போன் உள்ளிட்ட பொருட்கள் வாடிக்கையாளர்களுக்கு முறையாக டெலிவரி கொடுக்காமல் ஊழியர்கள் திருடிச் சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வாடிக்கையாளர்கள் கேட்டால் கொரியரில் எதுவும் வரவில்லை என தொடர்ந்து தெரிவித்து வந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து வாடிக்கையாளர்கள் நிர்வாகத்தில் புகார் தெரிவித்துள்ளனர். வாடிக்கையாளர்கள் தெரிவித்த புகாரின் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்ட நிர்வாகம் பொருட்கள் திருடப்பட்டுள்ளதை உறுதி செய்தனர். எனவே தனியார் கூரியர் நிறுவனம் சார்பில் விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

  புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் காஞ்சிபுரம் ஐயம்பேட்டையைச் சேர்ந்த லோகேஷ் (20), ஏனாத்தூர் சத்யா (25), ஜெகதீஷ் (22) ஆகிய 3 பேரும் டெலிவரிக்காக வந்த பொருள்களை திருடியது தெரியவந்தது. அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில் காஞ்சிபுரத்தில் ஒரு அறையில் பதுக்கி வைத்திருந்த 10 செல்போன், 4 எல்இடி டிவி உள்ளிட்ட சுமார் ₹2.5 லட்சம் மதிப்புள்ள பொருள்களை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பொருள்களை பறிமுதல் செய்த போலீசார் 3 பேரையும் நேற்றுமுன்தினம் கைது செய்தனர்

Tags : persons ,
× RELATED ஆடு திருடமுயன்ற இரண்டு பேர் கைது