×

மதுராந்தகம் ஒன்றியத்தில் கிராமம் கிராமமாக தி.மு.க வேட்பாளர் செல்வம் வாக்கு சேகரிப்பு

செய்யூர், ஏப். 8: மதுராந்தகம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தி.மு.க வேட்பாளர் நேற்று தீவிர பிரசாரம் மேற்கொண்டார். காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில், திமுக வேட்பாளர் செல்வம் போட்டியிடுகிறார். இவர், மதுராந்தகம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தார். செல்வம், கெண்டிரச்சேரி பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட பிரசாரமானது வில்வராயநல்லூர், முதுகரை, நேத்தப்பாக்கம், பையம்பாடி, பெருவேலி, கொளத்தூர், சரவம்பாக்கம், தொன்னாடு, நீர்பெயர் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். பிரசாரத்தின்போது, தொழில் வளர்ச்சி ஏற்படுத்தி தருவேன் என்றும், சாலை, குடிநீர் வசதி ஏற்படுத்தி தருவேன் என்றும், தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை நூற்றைம்பது நாட்களை, இருநூறு நாட்களாக நீட்டிப்பது தி.மு.க தேர்தல் அறிக்கையான நீட் தேர்வு ரத்து செய்வது, கல்வி, விவசாய கடன் ரத்து செய்து உள்ளிட்டவற்றை கூறி, பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது, வேட்பாளருடன் காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர், மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி, காங்கிரஸ் கட்சி மேற்கு மாவட்ட தலைவர் மதியழகன், மதுராந்தகம் ஒன்றிய செயலாளர் ஸ்ரீதரன், வி.சி கட்சி நிர்வாகி கதிர்வாணன், மாவட்ட பிரதிநிதிகள் சிவக்குமார்  தேவாத்தூர் குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் தணிகையரசு, சிகாமணி, ராமகிருஷ்ணன், கிணார் அரசு, முத்தையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும் பிரசாரத்தில் ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் என கலந்துக்கொண்டு வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு அளித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

Tags : candidate ,DMK ,village ,Village Vell ,
× RELATED கமுதியில் திமுக அலுவலகம் திறப்பு