×

கரூர் நகர பகுதியில் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் தம்பிதுரை தீவிர வாக்கு சேகரிப்பு

கருர், ஏப். 8: கரூர் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் தம்பிதுரை நேற்று நகர பகுதியில் சணப்பிரட்டி, தொழிற்பேட்டை, காந்திகிராமம், தாந்தோணிமலை, ராயனூர், சுக்காலியூர் பகுதிகளில் வாக்கு சேகரித்தார். பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ கீதா, ஆகியோரும் உடன்சென்று வாக்குசேகரித்தனர்.தம்பிதுரை பேசுகையில், தொகுதிக்கு நான் வரவில்லை என்கிறார்கள். ஜோதிமணி இருமுறை தேர்தலில் நின்றாரே அவர் வந்து மக்களை சந்தித்தாரா?. எதுவும் செய்யவில்லை என்கிறார்கள். தனிப்பட்ட எம்பியால் எதுவும் செய்து விட முடியாது. மத்திய மாநில அரசுகளின் திட்டத்தைத்தான் கொண்டு வர முடியும். ஸ்டாலின் நான் என்ன பேசினேன் என பேசியுள்ளார். நான் செய்ததால்தானே அவரால் பேச முடிகிறது. இங்கு சின்னத்துக்குத்தான் ஓட்டு. தனிப்பட்ட எனக்கு அல்ல. எடப்பாடி அரசு பொங்கலுக்கு ரூ.1000 வழங்கியது.

ஏழைகளுக்கு ரூ.2 ஆயிரம் வழங்க அறிவித்தது. ஆனால் வழக்குக்கு போய் விட்டனர். இப்படி எல்லாவற்றையும் தடுப்பது திமுக. கொடுப்பது அதிமுக. பஞ்சாயத்து தேர்தலையும் நடத்த விடவில்லை. காவிரி நீர் பிரச்சனைக்காக நாங்கள் போராடி வருகிறோம். தொகுதியில் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க வேண்டுமானால் காவிரியில் தண்ணீர் வர வேண்டும். கர்நாடகம் தண்ணீர் தர மறுக்கிறது. மத்தியில் மோடி தலைமையில் ஆட்சி அமைந்தால் இப்பிரச்சனைக்கு தீர்வு ஏற்படும் என்றார்.போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசுகையில், அதிமுக அரசின் சாதனைகளையும் நலத் திட்டங்களையும் பொதுமக்கள் எண்ணிப்பார்த்து வாக்களிக்க வேண்டும். விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் பிரதமர் அறிவித்தார். முதல் தவணை ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் செய்ய முடியாததை எல்லாம் அறிவித்துள்ளனர் என்றார். கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ கீதா, நெடுஞ்செழியன், சிவசாமி, தானேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : Thambidurai ,Karur ,DMK ,Lok Sabha ,
× RELATED ஒருபோதும் தேசிய கட்சிகளுக்கு மக்கள்...