×

குன்னூரில் ஆ.ராசா பிரசாரம்

குன்னூர், ஏப். 7:  நீலகிரி தனித்தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் ஆ.ராசா குன்னூர் கிராம பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
 சத்தியமங்கலம் பகுதிகளில் பிரசாரத்தை முடித்து வீட்டு ஆ.ராசா நேற்று குன்னூர் வந்தார். குன்னூர் காட்டேரி சந்திப்பில் தி.மு.க.,வினர் மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் பேண்டு வாத்தியங்கள் முழங்க பட்டாசுகள் வெடித்து சிறப்பான வரவேற்பு அளித்தனர். அதை தொடர்ந்து சேலாஸ், பழத்தோட்டம், அருவங்காடு, பெட்டட்டி போன்ற கிராமங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ஒவ்வொரு பகுதிக்கு செல்லும் போதும் அப்பகுதி மக்கள் ஆ.ராசாவை மகிழ்ச்சியோடு வரவேற்றனர்.
இந்த பிரசாரத்தில் ஆ.ராசா பேசியதாவது:
மீண்டும் மோடி தலைமையில் பா.ஜ., ஆட்சிக்கு வந்தால், அது பாசிச கட்சியாக மாறும், எனவே மோடியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். அதே போல ஊழல்வாதிகளான அ.தி.மு.க.,விடம் இருந்து தமிழகத்தை காப்பாற்ற வேண்டும்.  அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலை மூடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. திமுக., வெற்றி பெற செய்தால், தொழிற்சாலையை தொடர்ந்து இயங்க நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றார்.
இதையடுத்து குன்னூர் ஆழ்வார்பேட்டை, பெட்போர்டு, வண்ணாரப்பேட்டை, மேல்கடை வீதி, மவுண்ட் ரோடு, கிருஷ்ணாபுரம், கே.எம்.கே நகர், ஓட்டுபட்டரை, காந்திபுரம் போன்ற பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரசாரத்தின் போது மாவட்ட கழக செயலாளர் முபாரக், தேர்தல் பணி செயலாளர் இளித்தொரை ராமச்சந்திரன், நகர செயலாளர் ராமசாமி மற்றும் காங்கிரஸ் சுப்ரமணி, கம்யூ., ஆல்துரை, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சகாதேவன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இந்நிகழ்ச்சியில் வண்டிச்சோலை, குன்னூர் பகுதியை சேர்ந்த அதிமுகவினர் 50 க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்.

Tags : AARAA ,campaign ,Kunnur ,
× RELATED தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில்...