×

சூளகிரி, பர்கூரில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் பொது பார்வையாளர் ஆய்வு

கிருஷ்ணகிரி, ஏப்.5: சூளகிரி மற்றும் பர்கூர் உள்ளிட்ட இடங்களில் பதற்றமான வாக்குச்சாவடிகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் பாதுகாப்பு அறைகளை பொது பார்வையாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் ராம்ராவ் போன்ஸ்லே வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவி பேட் இயந்திரங்கள் வைக்கப்படவுள்ள பாதுகாப்பு அறைகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர், பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குபட்ட பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவி பேட் இயந்திரங்கள் வைக்கப்படவுள்ள பாதுகாப்பு அறைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், பர்கூர் தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடியான மல்லப்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உள்ள மையத்தை பார்வையிட்டார். அப்போது, அங்குள்ள பொதுமக்களிடம் கலந்துரையாடினார். அவர்களிடம் 100 சதவீதம் வாக்குப்பதிவுக்கு ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்த ஆய்வின்போது உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வேப்பனஹள்ளி குணசேகரன், பர்கூர் அமீர்பாஷா, தாசில்தார்கள் வெங்கடேசன், சேகர், கோபி, துணை தாசில்தார்கள் செந்தில், விஜயகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரங்கராஜன், ஜெபராஜ் சாமுவேல், பயாஸ் அகமது, ஹேமலதா மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags : Birchur ,
× RELATED கஞ்சா பதுக்கிய 2 பேர் கைது