×

சரணடைந்த 4 பேர் சிறையில் அடைப்பு

அம்பத்தூர், ஏப். 5: கொரட்டூர், குமரன் நகர் முல்லை தெருவை சேர்ந்தவர் பாண்டியன் (43). தேமுதிக பிரமுகர்.  கடந்த 28ம் தேதி பாண்டியனை மர்ம கும்பல் வெட்டி கொலை செய்தது. இது தொடர்பாக பாண்டியனின் உறவினரான அதே பகுதி வினோத்குமார் (30), கூட்டாளிகள் நரசிம்மன் (21), பிரசாந்த் (22), திருவேற்காடு பாஸ்கர் (21) ஆகிய 4 பேரும் திருக்கழுக்குன்றம், எழும்பூர் நீதிமன்றங்களில் சரணடைந்தனர். மேலும், இதுதொடர்பாக வினோத்குமாரின் தாய் லதா (54), திருவண்ணாமலையை சேர்ந்த ஜெயசீலன் (24), அருண்குமார் (26), மதுரவாயலை சேர்ந்த சிவா (22), அரும்பாக்கத்தை கௌதம் (28) ஆகியோரையும் கொரட்டூர் போலீசார் கைது செய்தனர். சரணடைந்த 4 பேரை போலீசார் காவலில் விசாரித்தபோது பாண்டியனை சொத்து பிரச்னையால் கொலை செய்தது தெரிந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நேற்று மாலை புழல் சிறையில் அடைத்தனர்.

Tags :
× RELATED ஆவடி ரயில் நிலையத்தில் ரூ.1.5 கோடி...