×

சொத்து தகராறில் விபரீதம் தம்பதி உள்பட 3 பேருக்கு சரமாரி அரிவாள் வெட்டு: அண்ணன், தம்பி கைது

ஆவடி, ஏப். 5: ஆவடியில் சொத்து தகராறில் தம்பதி உள்பட 3 பேரை அரிவாளால் சரமாரியாக வெட்டிய சகோதரர்களை போலீசார் கைது செய்தனர்.
ஆவடி, பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் பலராமன் (91). இவரது மனைவி சின்னம்மாள் (85). தம்பதியின் மகன் தாமோதரன் (35). பலராமன் வீட்டு அருகில் அவரது அண்ணன் மகன் கருணாகரன் (52), அவரது தம்பி சரவணன் (42) ஆகியோர் வசித்து வருகின்றனர். பலராமனுக்கும், கருணாகரனுக்கும் இடையே நீண்ட நாட்களாக சொத்து தகராறு இருந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொத்து பிரச்னையில் தாமோதரன், கருணாகரனின் தாயார் கௌரி அம்மாளை தாக்கியுள்ளார். இந்த வழக்கு பூந்தமல்லி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் தாமோதரன் நேற்று முன்தினம் கருணாகரனை சந்தித்து மேற்கண்ட வழக்கில் சாட்சி சொல்ல கோர்ட்டுக்கு வரக்கூடாது என்று மிரட்டி தாக்கியதாக தெரிகிறது. இதன் பிறகு நள்ளிரவு 1 மணிக்கு தாமோதரன் வீட்டுக்கு சென்ற கருணாகரன், அவரது தம்பி சரவணன் தாமோதரனின் பெற்றோரிடம் தகராறு செய்து அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி உள்ளனர். இதனை தடுக்க வந்த பக்கத்து வீட்டுக்காரர் ஆறுமுகம் (48) என்பவரையும் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் படுகாயம் அடைந்தவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். புகாரின்பேரில் ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து கருணாகரன், சரவணனை கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.

Tags : siblings ,brother-in-law ,
× RELATED அண்ணா-கலைஞர் ஓய்வுகொள்ளும் இடங்கள்...