×

100 சதவீத வாக்குப்பதிவு வலியுறுத்தி மாரத்தான் போட்டி

பாபநாசம், ஏப். 5: நூறு சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி பாபநாசம் பட்டுக்கோட்டை அழகிரி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாரத்தான் ஓட்டம் நடந்தது. மாரத்தானை பாபநாசம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் இளங்கோ கொடியசைத்து துவக்கி வைத்தார். பள்ளி வளாத்தில் தொடங்கிய மாரத்தான் ஓட்டம் முக்கிய வீதி வழியாக சென்று பாபநாசம் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் முடிவடைந்தது. பாபநாசம் தாசில்தார் கண்ணன், பாபநாசம் ஆர்ஐ ராஜ்குமார், தேர்தல் தாசில்தார் செந்தில்குமார், துணை தாசில்தார்கள் தர்மராஜ், செல்வராஜ், செல்வராணி, பள்ளி தலைமையாசிரியர் சந்திரன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

Tags : Marathon contest ,voting ,
× RELATED கேரளாவில் பா.ஜ.க.வுக்கு வாக்களிக்க ஒரு...