×

பூதலூர் ஒன்றிய பகுதியில் தஞ்சை மக்களவை தொகுதி அமமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

தஞ்சை, ஏப். 5: பூதலூர் ஒன்றிய பகுதியில்  தஞ்சை மக்களவை தொகுதி அமமுக வேட்பாளர் முருகேசன் வாக்கு சேகரித்து பிரசாரம் செய்தார்.
பூதலூர் ஒன்றியத்தில் தஞ்சை மக்களவை தொகுதி அமமுக வேட்பாளர் முருகேசன் நேற்று வாக்கு சேகரித்தார். அதன்படி பூதலூர் ஒன்றியம் பவனமங்கலம், விஷ்ணம்பேட்டை, நாகாச்சி, அலமேலுபுரம்பூண்டி, திருச்சென்னம்பூண்டி, கோவிலடி, சுக்காம்பார், கல்லணை, தோகூர், புதூர், பாதிரக்குடி, செய்யாமங்கலம், அகரபேட்டை, நேமம், இளங்காடு, ரங்கநாதபுரம், பழமார்நேரி, புதுச்சத்திரம், மைக்கேல்பட்டி, ஒன்பத்துவேலி, திருக்காட்டுப்பள்ளி, கூடநாணல், முல்லைக்குடி, புதுஆற்காடு, பழைய ஆற்காடு, நத்தமங்கலம், ஒரத்தூர், செம்பியன்களரி, மேகளத்தூர், கச்சமங்கலம் ஆகிய பகுதிகளில் வாக்கு கேட்டு பிரசாரம் செய்தார்.

அப்போது அமமுக வேட்பாளர் முருகேசன் பேசும்போது, மக்கள் விரோத ஆட்சி நடத்தி வரும் பாஜகவை எதிர்க்கும் முதுகெலும்பு உள்ள ஒரே தலைவர் டிடிவி தினகரன். அவரது தலைமையில் தமிழகம் நல்ல எதிர்காலத்தை பெறும் நாள் வெகுதொலைவில் இல்லை. அவரது கரத்தை வலுப்படுத்த என்னை பரிசு பெட்டி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வைக்க வேண்டுகிறேன். நான் வெற்றி பெற்றால் தஞ்சை மக்களவை தொகுதி மக்களுக்கு தேவையான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய பாடுபடுவேன். அதற்கு எனது அறக்கட்டளை மூலம் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ஆண்டுக்கு ரூ.1 கோடி வீதம் 5 ஆண்டுக்கு ரூ.5 கோடி செலவிட திட்டமிட்டுள்ளேன். அதேபோல் தஞ்சை மக்களவை தொகுதியில் உள்ள ஏழை மக்களின் குழந்தைகளின் கல்வியை எனது கல்வி நிறுவனங்கள் மூலம் இலவசமாக அளிக்க உள்ளேன் என்றார்.

Tags : constituency ,Thanjavur Lok Sabha ,union area ,
× RELATED தென் சென்னை தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் இடிதாங்கி பொருத்தம்..!!