பாபநாசம், ஏப். 5: பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் சுற்றுவட்டார பகுதிகளில் கோமாரிநோய் தடுப்பூசி முகாம் நடந்து வருகிறது.
அதன்படி ராமானுஜபுரம் ஊராட்சியில் ஊராட்சி மன்றம் அருகில் மற்றும் ராமச்சந்திரபுரம் உள்ளிட்ட இடங்களில் நடந்த முகாமில் 400 கால்நடைகளுக்கு கோமாரிநோய் தடுப்பூசி போடப்பட்டது. இதேபோல் மேலகபிஸ்தலம் ஊராட்சி வளாகத்தில் 200 கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
கபிஸ்தலம் கால்நடை உதவி மருத்துவர் வடிவேலன், கோமாரிநோய் தடுப்பூசியை போட்டார். முகாமில் கும்பகோணம் உதவி இயக்குனர் ரமேஷ் முகாமில் பங்கேற்றார்.