நாகர்கோவில், ஏப்.5: கன்னியாகுமரி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் நிருபர்களிடம் கூறியதாவது: கன்னியாகுமரி மக்களவை தொகுதி காங்கிரஸ்- திமுக கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் நான் தொகுதி முழுவதும் தீவிர பிரசாரம் செய்து வருகிறேன். எனக்கு ஆதரவு திரட்ட காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய்தத் இன்று (5ம் தேதி) நாகர்கோவில் வருகிறார். அவர் 2 நாட்கள் குமரிமாவட்டத்தில் முக்கிய இடங்களில் பிரசாரம் செய்து, எனக்கு ஆதரவு திரட்டுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.பேட்டியின் போது, அகில இந்திய ஊடக தொடர்பாளர் ரமணி, செய்தி ெதாடர்பாளர் ஆனந்த் சீனிவாசன், செயல் தலைவர்கள் மோகன் குமாரமங்கலம், மயூரா ஜெயக்குமார், தமிழ்நாடு பஞ்சாயத்துராஜ் சங்கேதன் ஒருங்கிணைப்பாளர் ராம்மோகன் ஆகியோர் உடன் இருந்தனர்.