திருத்துறைப்பூண்டி, ஏப்.4: திருத்துறைப்பூண்டி நகரில் புகழ் பெற்ற பிறவிமருந்தீசர் கோயில் (பெரிய கோயில்) சித்திரை திருவிழாவையொட்டி விநாயகர் வீதியுலா நடைபெற்றது.திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிறவி மருந்தீஸ்வர், பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னர் விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் கோயில் செயல் அலுவலர் முருகையன், மேலாளர் சீனிவாசன், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். ஒவ்வொரு நாளும் உபயதாரர்கள் சார்பில் காலை, இரவு நேரங்களில் சுவாமி வீதியுலா நடைபெறும்.