×

போலி முத்திரையிட்ட பாஸ்போர்ட்டில் மலேசியாவிலிருந்து திருச்சி வந்த 2பேர் கைது

ஏர்போர்ட், ஏப்.4: மலேசியாவிலிருந்து இருந்து போலி முத்திரையிட்ட பாஸ்போர்ட்டில் திருச்சி வந்த 2 பேரை ஏர்போர்ட் போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து மலிண்டோ விமானம் திருச்சி விமான நிலையத்திற்கு நேற்றுமுன்தினம் இரவு 10.30 மணியளவில் வந்தது. அதில் வந்த பயணிகளை இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஐதராபாத் மாநிலம் சார்மினார் பகுதியை சேர்ந்த சம்ஹிர் ரஹ்மத் (23) என்பவரும், அதே விமானத்தில் வந்த பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த நரேந்திர சிங் (51) என்பவரும் தங்களுடைய பாஸ்போர்ட்டில் போலியான இமிகிரேஷன் முத்திரையிட்டு இங்கு வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை, இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் திருச்சி விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவர்கள் 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags : persons ,Malaysia ,Trichy ,
× RELATED மலேசியாவில் கடற்படை ஒத்திகையின்போது...