×

குடும்பம் நடத்த மனைவி வரமறுத்ததால் திருமணமான 5 மாதத்தில் புது மாப்பிள்ளை தற்கொலை

திருச்சி, ஏப். 4:  திருச்சி ராம்ஜிநகர் சின்னகொத்தமங்களம் சுப்ரமணியகோவில் தெருவை சேர்ந்தவர் பரிமளம். ஓய்வு ஆர்பிஎப் எஸ்ஐ. இவரது மகன் பிரவீன்குமார் (26). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.  அப்போது தன்னுடன் வேலை செய்த பொன்மலை பகுதியை சேர்ந்த சர்மிளா என்ற பெண்ணை காதலித்து பின்னர் இரு குடும்பத்தாரின் சம்மத்துடன் கடந்த 5 மாதங்களுக்கு முன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
கணவன், மனைவி குடும்பம் நடத்தி வந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன் தாலி பிரித்து போட்டு வருவதாக கூறி சென்ற சர்மிளா அதன்பின்னர் வீடு திரும்பவில்லை.

பிரவீன்குமார் நேரில் சென்று அழைத்தும் வராததால் மனவேதனை அடைந்து நேற்று அதிகாலை மனைவியின் புடவையால் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த எ.புதூர் போலீசார் பிரவீன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில், திருமணம் நடந்தது முதல் தனி குடித்தனம் செல்ல வற்புறுத்தியதாகவும், இதற்கு பிரவீன் ஒத்துக்கொள்ளாததால் கணவன், மனைவியிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் கடந்த 15தினங்களுக்கு முன் தாய் வீட்டிற்கு சென்றவர் திரும்பி வராததால் மனவேதனை அடைந்து பிரவீன் தற்கொலை செய்து கொண்டது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : groom ,suicide ,invocation ,
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை