×

காங். வேட்பாளர் திருநாவுக்கரசர் தேர்தல் பிரசாரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க முயற்சி செய்வேன்

திருச்சி, ஏப்.4:  திருச்சியில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் என்னை பெற்றி பெறச் செய்தால் ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத்தர முயற்சி செய்வேன் என்றார். அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணி கட்சியின் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் நேற்று திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ள பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் சென்ற இடங்களில் எல்லாம் பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பொதுமக்களிடையே திருநாவுக்கரசர் பேசுகையில், பாய்லர் ஆலையை நம்பி செயல்பட்டு வந்த பல சிறு குறு தொழிசாலைகள் மூடப்பட்டு விட்டன. இதனால் வேலை இழந்து தவிக்கும் ஏராளமான இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்று தர முயற்சிப்பேன். தமிழகத்தின் இதயம் போன்ற மத்திய பகுதியான திருச்சியில் இதுவரை ஒருங்கிணைந்த பஸ்நிலையம் அமைக்கவில்லை.  என்னை வெற்றி பெற செய்தால் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன். திருச்சி விமான நிலையத்தை மேலும்  விரிவுபடுத்துவேன். நீண்ட காலமாக நிறைவேற்றி முடிக்கப்டாமல் உள்ள ரிங் ரோடு பணிகளையும் விரைவாக முடிக்க பாடு படுவேன். எனவே எனக்கு கை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கூறினார். பிரசாரத்தின் போது மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு மற்றும் கூட்டணி கட்சியினர் உடன் சென்றனர்.

Tags : Tirunavukkarar ,election campaign Youth ,
× RELATED திருநாவுக்கரசர் பேட்டி வாக்கு...