×

கண்டமனூர் பகுதியில் பறக்கும் படையினர் வாகனச்சோதனை

வருசநாடு, ஏப்.4: கண்டமனூர் பகுதியில் ஆத்தங்கரைபட்டி, அண்ணாநகர், குப்பிநாயக்கன்பட்டி, லட்சுமிபுரம், பொன்நிலம், டாணா தோட்டம் போன்ற பகுதிகளில் தேர்தல் பறக்கும் படை மற்றும் கடமலைக்குண்டு காவல்துறை அதிகாரிகள் இணைந்து வாகனச்சோதனையில் ஈடுபட்டனர்.
தேனி - வருசநாடு சாலையில் டூவீலர், நான்குசக்கர வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து கனரக வாகனங்களையும் பலத்த சோதனைக்கு பின் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தேர்தல் அதிகாரிகளிடம் கேட்டதற்கு, முறையான ஆவணங்கள் வைத்திருந்தால் அவர்கள் வைத்திருக்கும் பணம் மற்றும் பொருளை கொடுத்து அனுப்பி வருகிறோம். ஆனால், முறையான ஆவணங்களாக இல்லாவிட்டால் அவற்றை பறிமுதல் செய்து ஆண்டிபட்டி கருவூலத்தில் பாதுகாத்து வருகிறோம் என்றார். இச்சோதனையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி ரவிக்குமார், எஸ்.ஐ வரதராஜ், காவல்துறை அதிகாரிகள் வெங்கடேஷ், முத்துக்குமார், உதயகுமார் மற்றும் பலர் ஈடுபட்டனர்

Tags : soldiers ,area ,Kandanur ,
× RELATED தெலங்கானா மக்களவை தேர்தல் பணி: 2,000 வீரர்கள் புறப்பட்டனர்