×

பெரியகருப்பன் எம்எல்ஏ பேச்சு திருப்புத்தூர் அருகே ரூ.70 ஆயிரம் பறிமுதல்

திருப்புத்தூர், ஏப்.4: திருப்புத்தூர் அருகே டூவீலரில் உரிய ஆவணமின்றி கொண்டு வந்த ரூ.70 ஆயிரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்த
னர். சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அருகே கீழச்சிவல்பட்டி டோல்கேட்டில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி மாணிக்கவாசகம் தலைமையில் எஸ்ஐ சோமசுந்தரம் மற்றும் அதிகாரிகள் நேற்று அதிகாலை அந்த வழியாக வந்த டூவீலரை நிறுத்தி சோதனை செய்தனர். இதில், டூவீலரை ஓட்டி வந்த புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள ராயபுரத்தை சேர்ந்த முத்துவிடம் உரிய ஆவணமின்றி ரூ.70 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், திருப்புத்தூர் கருவூலத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.

Tags : Periyakarupan MLA ,Tiruppattur ,
× RELATED சீல்டு கால்வாய் பணிக்கு நிதி ஒதுக்கீடு அவசியம்: விவசாயிகள் எதிர்பார்ப்பு