மேலூர், ஏப். 4: மேலூர் அருகில் உள்ள அட்டப்பட்டியை சேர்ந்த ஆறுமுகம் மகன் ராஜ்குமார்(30). அமமுக அமைப்புசாரா ஓட்டுனர் அணி துணை செயலாளர். இவர் நேற்று கட்சி பணிகளை மேற்கொண்டு விட்டு வீட்டிற்கு டூவீலரில் திரும்பி உள்ளார். பூமங்களப்பட்டி அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த டுவீலர் ரோட்டோர மைல் கல்லில் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ராஜ்குமார் பலியானார். கொட்டாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.