திருப்பரங்குன்றம், ஏப்.4: திருப்பரங்குன்றம் அருகில் வளைந்து விழும் நிலையில் உள்ள ஆபத்தான மின் கம்பத்தை சரி செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.திருப்பரங்குன்றம் அருகில் உள்ள பாம்பன் நகர் பகுதியில் குடியிருப்புகளுக்கு நடுவே மின்கம்பம் உள்ளது. மின் வயர்களின் அழுத்தம் காரணமாக பக்கவாட்டில் ஒரு பக்கமாக சாய்ந்து முறிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த மின்கம்பம் வயர்களின் அழுத்தம் காரணமாக மெல்ல மெல்ல பக்கவாட்டில் ஒரு பக்கமாக சாய்ந்து வருகின்றது.
குடியிருப்பு பகுதிக்கு நடுவில் உள்ளதால் மின்கம்பம் சாய்ந்தால் பெரும் அசம்பாவிதம் ஏற்படும் என்பதால், மின் கம்பத்தை சரி செய்ய மின்வாரியத்திடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என இப்பகுதியினர் புகார் தெரிவிக்கின்றனர். ஏதாவது அசம்பாவிதம் ஏற்படும் முன் ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பத்தை சரி செய்ய இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.