×

மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பலி

திருச்செந்தூர், ஏப். 4: திருச்செந்தூரில் மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பரிதாபமாக இறந்தார். திருச்செந்தூர் முத்தாரம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த  சண்முகசுந்தரம் மகன் கண்ணன் (28). எலக்ட்ரீசியனான இவருக்கு திருமணமாகவில்லை.  நேற்று முன்தினம் மாலை திருச்செந்தூர்- குலசேகரன்பட்டினம் சாலையில் உள்ள தனியார் தோட்டத்தில் கண்ணன் மின் மோட்டாரில் ஏற்பட்ட பழுதை சரிபார்த்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவலறிந்து விரைந்து சென்ற திருச்செந்தூர் தாலுகா போலீசார், உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எஸ்ஐ சுப்பிரமணியன் வழக்குப் பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் முத்துராமன் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags :
× RELATED இளையரசனேந்தலில் சுமை தூக்கும் தொழிலாளர் சங்க பெயர் பலகை திறப்பு