×

விதவையிடம் பலாத்கார முயற்சி: போலீஸ்காரர் மீது வழக்குபதிவு

புதுக்கோட்டை, ஏப். 4:  தூத்துக்குடி அடுத்த புதுக்கோட்டை அருகேயுள்ள முடிவைத்தானேந்தல் போஸ்ட் ஆபீஸ் தெருவைச் சேர்ந்தவர் லட்சுமணன். ஓய்வுபெற்ற எஸ்ஐ. இவரது மகள் தங்கபொண்ணு (30). இவரது கணவர் சரவணன் விருநகர் மாவட்டம் ஆயுதப்படையில் வேலைபார்த்தபோது கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து விட்டார். கணவர் மறைவுக்குப் பிறகு 2 மகன்கள் மற்றும் ஒரு மகளுடன் முடிவைத்தானேந்தலில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வந்த தங்கபொண்ணு, உள்ளூரில் ஆறுமுகம் என்பவர் நடத்தி வந்த ஹவுசிங் லோன் நிறுவனத்தில் அலுவலராகப் வேலைபார்த்தார். இந்த நிறுவனத்திற்கு நேற்று முன்தினம் மதியம் அத்துமீறி புகுந்த அதே ஊரைச் சேர்ந்த பரமசிவன் மகனும் கடம்பூர் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருபவருமான முத்துக்குமரன் என்பவர், அங்கு தனியாக இருந்த தங்கபொண்ணுவை  பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றாராம். அத்துடன் தனது ஆசைக்கு இணங்காவிட்டால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. அவரிடம் இருந்த தப்பிக்க கடுமையாகப் போராடிய தங்கபொண்ணுவுக்கு  காயம் ஏற்பட்டது. அப்போது  தற்செயலாக நிறுவனத்தின் உரிமையாளர் ஆறுமுகம் வரவே தங்கபொண்ணுவை முத்துக்குமரன் கீழே தள்ளிவிட்டு தப்பியோடினார். இதில் காயமடைந்த தங்கபொண்ணு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த புதுக்கோட்டை அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி, தலைமறைவான முத்துக்குமரனை தேடி வருகிறார்.

Tags : widow ,
× RELATED ஜம்மு காஷ்மீரில் வீர மரணமடைந்த...