×

ஆற்றூரில் தேர்தல் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்

நாகர்கோவில், ஏப்.4 :  ஆற்றூரில் தேர்தல் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நேற்று நடைபெற்றது.  மக்களவை தேர்தலில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் பொதுமக்கள் தங்களது வாக்குரிமையை பதிவு செய்திட வலியுறுத்தி பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆற்றூர் பேரூராட்சி ஏற்றக்கோடு, ஆற்றூர், திருவட்டார் வழியாக ஆற்றூர் பேரூராட்சி அலுவலகம் வரை வந்து சேரும் மாரத்தான் விழிப்புணர்வு ஓட்டம் நேற்று காலை நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு ஓட்டத்தை பத்மநாபபுரம் சப் கலெக்டர் ஷரண்யா அறி துவக்கி வைத்தார். திருவட்டார் தாசில்தார் சுப்பிரமணியன், ஆற்றூர், திருவட்டார் பேரூராட்சி செயல் அலுவலர்கள், திருவட்டார் வருவாய் ஆய்வாளர் ஆல்பர்ட், ஆற்றூர் கிராம நிர்வாக அலுவலர்கள் அனிதா மற்றும் பொதுமக்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : river ,
× RELATED மங்களகோம்பை செல்லும் சாலையில் புலியூத்து ஆற்றின் குறுக்கே பாலம் தேவை