×

திருச்சி சிறை கைதி நெஞ்சுவலியால் சாவு

திருச்சி, ஏப்.3:  திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணை கைதி நெஞ்சுவலியால் மருத்துமனையில் இறந்தார். கடலூர் மாவட்டம், மேட்டுத்தெருவை சேர்ந்தவர் ராஜன்(54). கடந்தாண்டு டிசம்பர் மாதம் திருப்பனந்தாள் போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணை கைதியாக திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.  இந்நிலையில் நேற்று மதியம் திடீரென நெஞ்சு வலியால் துடித்த ராஜனை சக கைதிகள் மீட்டு சிறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்,  அங்கு பரிசோதித்த டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ராஜன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அரசு மருத்துவமனை மற்றும் கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Tiruchi ,prison prisoner ,
× RELATED மூதாட்டியிடம் செயின் பறிப்பு