×

லால்குடி அருகே மொபட்டில் சென்ற பெண்ணை மறித்து 8 பவுன் செயின் பறிப்பு

லால்குடி, ஏப்.3:  லால்குடி அருகே மொபட்டில் சென்ற பெண்ணை வழிமறித்து 8 பவுன் தாலி செயின் பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டம், தச்சங்குறிச்சி பெருமாள் கோயில் பகுதியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் மனைவி ஹெலினா அலங்கார சோபியா (47). இவர் லால்குடி தபால் நிலையத்தில் எழுத்தராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று வழக்கம்போல பணிக்கு காலை தச்சங்குறிச்சியிலிருந்து லால்குடிக்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தார். பல்லபுரம் அருகே வந்தபோது திடீரென இரண்டு வாலிபர்கள் மொபட்டினை மறித்து ஹெலினா அலங்கார சோபியாவின் கழுத்தை பிடித்து கீழே தள்ளி கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் தாலி செயினை பறித்து சென்றனர். இதில் கீழே விழுந்த  ஹெலினா அலங்கார சோபியாவிற்கு கை மற்றும் கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு, லால்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் லால்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags : pound chain ,Lalgudi ,Mobat ,
× RELATED ஜல்லிக்கட்டு வீரர் அடித்துக்கொலை