×

மலேசியாவிலிருந்து திருச்சிக்கு போலி பாஸ்போர்ட்டில் பயணித்தவர் கைது

ஏர்போர்ட், ஏப்.3: மலேசியாவில் இருந்து நேற்று முன்தினம் காலை திருச்சிக்கு விமானம் ஒன்று வந்தது. அந்த விமானத்தில் வந்து இறங்கிய பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை வான் நுண்ணறிவு பிரிவு தலைமை அதிகாரி கபில்சுக்லா தலைமையில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இதில் பயணி ஒருவரின் பாஸ்போர்ட்டை அதிகாரிகள் சோதனை செய்தனர். அது போலியானது என்பது தெரியவந்தது. இதனையடுத்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில், புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஏனாதி ஜீவா நகரை சேர்ந்த செல்வம்(49) என்பதும், போலி பாஸ்போர்ட்டில் மலேசியாவில் இருந்து திருச்சி வந்ததும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவரை திருச்சி விமான நிலைய போலீசில் அதிகாரிகள் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Malaysia ,
× RELATED வெளிநாடு தப்ப முயன்ற குற்றவாளி சென்னையில் கைது