×

புதன்சந்தையில் மாடுகள் விலை உயர்வு

சேந்தமங்கலம், ஏப்.3: பறக்கும் படையினர் கெடுபிடியால் வியாபாரிகள் வராததாலும், குறைந்த அளவில் மாடுகள் விற்பனைக்கு வந்ததாலும் புதன்சந்தையில் மாடுகள் விலை உயர்ந்தது. நாமக்கல் மாவட்டம், புதன்சந்தையில் மாட்டுச்சந்தை செவ்வாய்கிழமை கூடுவது வழக்கம். மாடுகளை வாங்கவும், விற்கவும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் வருகின்றனர். மேலும், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, கோவை, பொள்ளாச்சி, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வியாபாரிகள் மாடுகளை வாங்க  புதன்சந்தைக்கு வருகின்றனர். நாடாளுமன்ற தேர்தலையொட்டி அதிகாரிகளின் கெடுபிடியால் பல்வேறு பகுதியில் இருந்து குறைந்த அளவில் வியாபாரிகள் வந்திருந்தனர். மேலும், வறட்சி காரணமாக குறைந்த எண்ணிக்கையில் மாடுகள் விற்பனைக்கு வந்தது. இதனால், சந்தையில் மாடுகள் விலை உயர்ந்தது.  கடந்த வாரம் ₹16 ஆயிரத்திற்கு விற்கப்பட்ட இறைச்சி மாடு இந்த வாரம் ₹17 ஆயிரத்திற்கும், ₹38 ஆயிரத்திற்கு விற்கப்பட்ட கறவை மாடு ₹39 ஆயிரத்திற்கும், ₹11 ஆயிரத்திற்கு விற்கப்பட்ட கன்றுகுட்டி ₹12 ஆயிரத்திற்கு விற்பனையானது.

Tags : bush ,
× RELATED தீபாவளிக்கு ரெடியான ‘குட்டி ஜப்பான்’: புஷ்ஷ்… டம்… டமார்…