×

காட்டுமாடு முட்டியதில் டீக்கடைக்காரர் காயம்

மூணாறு, ஏப்.3: மூணாறில் கல்லார் எஸ்டேட் புதுக்காடு டிவிஷன் பகுதியை சேர்ந்தவர் அன்னகொடி(40). இவர் டீ கடை நடத்தி வருகிறார். நேற்று காலை கல்லார் புதுக்காடு டிவிஷனில் இருந்து மூணாறுக்கு சென்று கொண்டிருந்தார். அப்பொழுது தனியார் ெதாழிற்சாலை அருகில் திடீரென்று நுழைந்த காட்டு மாடுகள் அன்னகோடியை முட்டியது. இதில் நிலை தடுமாறி தவறி விழுந்தவரை மக்கள் காப்பாற்றி உடனடியாக மூணாறு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அன்னகொடி கூறுகையில், எஸ்டேட் பகுதிகளில் காட்டு மாடுகள் சர்வசாதாரணமாக உலா வருகின்றன. தொழிலாளர்கள் மற்றும் குழந்தைகள் வசிக்கும் இப்பகுதியில் காட்டுமாடுகள் வருவதை தடுக்க வனத்துறை அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

Tags :
× RELATED புகையிலை விற்றவர்கள் கைது