×

பேராவூரணி தாசில்தார் அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணி

பேராவூரணி, ஏப். 3: பேராவூரணி தாசில்தார் அலுவலகத்தில் மக்களவை தேர்தலில் பயன்படுத்தப்படவுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணி நடந்தது. பேராவூரணி தாசில்தார் அலுவலகத்துக்கு கடந்த சில நாட்களுக்கு முன் தஞ்சையிலிருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள், கன்ட்ரோல் யூனிட் மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் வகையில் ஒப்புகை சீட்டுடன் கூடிய இயந்திரங்கள் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டு அவை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கமலக்கண்ணன் முன்னிலையில் பொருள் வைப்பறையில் பத்திரமாக பூட்டி சீல் வைக்கப்பட்டிருந்தது. இதைதொடர்ந்து துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு பணியில் இருந்தனர். இந்நிலையில் கன்ட்ரோல் யூனிட் 312 மற்றும் வாக்குப்பதிவு இயந்திரம் 312, விவிபேட் இயந்திரங்கள் 338 ஆகியவற்றின் சீரியல் எண் மற்றும் எண்ணிக்கை குறித்து சரிபார்க்கப்பட்டது. உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கமலக்கண்ணன் மேற்பார்வையில் தாசில்தார் ஜெயலட்சுமி முன்னிலையில் தேர்தல் பிரிவு துணை தாசில்தார் யுவராஜ், மண்டல துணை தாசில்தார் சீனிவாசன், ஆர்ஐகள் அஷ்ரப் அலி, சுப்பிரமணியன், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள் ஆகியோர் சரிபார்ப்பு பணியில் ஈடுபட்டனர்.


Tags : office ,Perawaraani Tahsildar ,
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...