×

மணமேல்குடி அருகே மது பதுக்கி விற்ற 3 பேர் கைது

மணமேல்குடி, ஏப்.3: மணமேல்குடி அருகே மது பதுக்கி விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.மணமேல்குடி மற்றும் ஜெகதாப்பட்டிணம் ஆகிய பகுதிகளில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெறுவதாக வரப்பெற்ற புகார் தொடர்பாக, நேற்று மேற்கண்ட இடத்தில் புதுக்கோட்டை கோட்டக்கலால் அலுவலர் சாலை தவவளன் மற்றும்   கலால் தனி வருவாய் ஆய்வாளர் முத்து மற்றும் ராஜா ஆகியோருடன்  திடீர் தணிக்கை செய்யப்பட்டது. அப்போது  ஜெகதாப்பட்டிணம், சிங்கவனம்,  மணமேல்குடி ஆகிய இடங்களில் உள்ள மதுபான கடைகளுக்கு அருகே கள்ளத்தனமாக  மதுபானங்கள் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.  இதுதொடர்பாக பில்லுவலசு கிராமத்தை சேர்ந்த கருப்பையா (37), தோப்புவயலை சேர்ந்த சிவக்குமார் (40) மற்றும்  மணமேல்குடியை சேர்ந்த ராஜா (39) ஆகியோரை பிடித்து அவர்களிடமிருந்து 116 மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டு, ஆலங்குடி மதுவிலக்கு பிரிவு போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். அதனடிப்படையில் மதுவிலக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.



Tags : Manamkuldi ,
× RELATED மணமேல்குடி அருகே சேவல் சண்டை போட்டி 26 பேர் மீது வழக்கு பதிவு